- அதிகாரப்பூர்வ மொழி சட்ட வாரம்
- புதுக்கோட்டை
- தமிழ் அபிவிருத்தி திணைக்களம்
- உத்தியோகபூர்வ மொழிச் சட்டம்
- தின மலர்
புதுக்கோட்டை, டிச. 28: தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட நாளை (27.12.1956) நினைவுகூரும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கொண்டாடப்படும் ஆட்சி மொழி சட்ட வாரத்தையொட்டி புதுக்கோட்டையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை காந்திப்பூங்கா அருகே இப்பேரணி தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி கீழராஜ வீதி வழியாக சென்று, புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நிறைவு பெற்றது. தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சபீர்பானு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சிலம்பம், கரகம், தமிழ்ப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் இப்பேரணி நடைபெற்றது. மன்னர் கல்லூரி முதல்வர் புவனேசுவரி, தமிழ்ச்செம்மல் விருதாளர். சம்பத்குமார், தமிழாசிரியர் கழக நிர்வாகிகள் புதுக்கோட்டை தமிழ் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
The post புதுக்கோட்டையில் ஆட்சிமொழி சட்ட வாரம் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.